வவுனியா – செட்டிக்குளம் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினரால் செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வெற்றி
செட்டிகுளம்
மொழி அழிந்தால் அதைச்சார்ந்த இனம் மட்டுமே அழியும். ஆனால் விவசாயம் என்ற ஒன்று அழிந்தால் இந்த உலகமே அழியும் என்ற முதுமொழியை நினைவில் வைத்துக் கொண்டு.
அந்தவகையில் இன்றைய தினம் ( 2020.07.22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளது.
செட்டிகுளம் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினரால் பயிரிடப்பட்ட கீரை இன்றைய தினம் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளதுடன் அதிகாரிகளின் இச்செயற்பாடு அனைவருக்கும் முன்னுதாரணமாக காணப்படுகின்றது.