பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முப்ப டையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று (17.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியாவில் மாவட்ட செயலகம் ,
பொலிஸ் நிலையம் , இ ரானுவ தலமையகம் போன்ற இடங்களில் காலை 8.30 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
சு காதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 13ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில்
முப்ப டையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது.
இன்று (16) மற்றும் நாளையதினம் (17) முப்ப டையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோருக்கான வாக்களிப்புகள் இடம்பெறுகின்றன.
கோ விட்-19 வை ரஸ் அ ச்சம் காரணமாக மு கக்கவசம் அ ணிந்து வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.