கொரோனா அ.ச்சுறுத்தல் காரணமாக கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
புதிய வகை கொ.ரோனா வை.ரஸ் பரவல் காரணமாக, அதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு கொண்டு வந்துள்ளது.இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கடுமையான மேற்பார்வையின் கீழ் இருப்பர்.
அதன் பின் அவர்கள் கொ.ரோனா பரிசோ.தனையை தங்கள் சொந்த செலவில் செய்ய வேண்டும்.சோதனையின் போது எதிர்ம.றையாக வந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.நேர்மறையான முடிவு வந்தால், அவர்கள் அரசாங்க தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்படுவர் என்றார்.
இதேவேளை மெக்ஸிகோ, கரீபியன் ஆகிய நாடுகளுடனான விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கனடா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.