செட்டிகுளம் ப_டு_கொ_லை
1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் திகதி செட்டிகுளம் பகுதியில் க_ட_த்திச் செல்லப்பட்டு ப_டு_கொ_லை செய்யப்பட்ட ஐம்பத்தி ரெண்டு உறவுகளின் முப்பத்தியாறவது ஆண்டு நினைவேந்தல்
நிகழ்வு இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணி தலைவியும் நல்லூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான வாசுகி சுதாகரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் உணர்வு பூர்வமாக பிரத்யேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்றது.
செட்டிகுளம் பகுதியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்று தடை விதித்ததாகவும்
எதிர்வரும் 14 ஆம் திகதி வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ராஜு கூட்டமைப்பு உறுப்பினர் அருள்கரன் உட்பட நான்கு உறுப்பினர்களை ஆயராகுமாறும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.