
வவுனியா மணியர்குளம் பகுதியில் குளத்தில் இருந்து நபர் ஒருவரின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்தநபர் பிறிதொரு நபருடன் இன்று காலை 7 மணியளவில் மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் மீ ன்பி டித்து கொண்டிருந்தவரை காணாத அவரது நண்பர் தேடிச்சென்று பார்த்த போது அவர் குளத்தில் ச டலமாக கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா செல்வராசா வயது 50 என்ற நபரே ம ரணமடைந்துள்ளார்.
ச டலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோ தனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.