திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகர் தனுஷ் மொட்டை அடித்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.தென்னந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தனுஷ், பல வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக இருக்கிறார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில் ஒரேநாளில் அதிகம் பேர் லைக்ஸ்களை அள்ளிக்குவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றார் தனுஷ்.அங்கு மகன்களுடன் சேர்ந்து தனுஷ் மொட்டையடித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார், இதுதெரியால் இருக்க கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் தொப்பியும் அணிந்திருந்தார்.
ஆனாலும் அவர் மொட்டையுடன் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது, அடர்த்தியான தாடியுடன் நீளமான முடியும் வைத்திருந்த தனுஷ், தற்போது மொட்டை அடித்திருப்பதால் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்டதாக என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.