Friday, March 28, 2025

தொடரும் மழையுடனான வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை!

- Advertisement -
- Advertisement -

தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மற்ற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்நோக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அதன் செயற்பாட்டு அறைக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

24 மணிநேர செயற்பாட்டு நிலையத்தினால் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular