Saturday, March 15, 2025

வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

- Advertisement -
- Advertisement -

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தீவு முழுவதும் மழை நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல மாகாணங்களில், 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மி.மீற்றர் கனமழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA