- Advertisement -
- Advertisement -
கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய STD மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தகவல்கள் இலங்கையில் பாலியல் கல்வி பற்றி புரிதல், அல்லது அறியாமையை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -