Tuesday, April 1, 2025

இன்றும் பணிப்புறக்கணிப்பில் இறங்கிய தொழிற்சங்கங்கள் : முக்கிய கலந்துரையாடல்!

- Advertisement -
- Advertisement -

சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும் (14.02) வேலை நிறுத்தம் தொடரும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று (13.02) காலை 6.30 மணியளவில் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இதன் காரணமாக பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் தடைபட்டுள்ளதுடன், ஆயுதப்படையினரின் ஆதரவுடன் வைத்தியசாலை நடவடிக்கைகளை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காத காரணத்தினால் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

ஏறக்குறைய ஒரு இலட்சம் சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்  உபுல் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, 72 தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், நாளை (15.02) வேலை நிறுத்தம் நடைபெறுமா இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பி. தமது தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரையும் இன்று கொழும்புக்கு அழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக மடிவத்த தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular