- Advertisement -
- Advertisement -
யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று திங்கட்கிழமை (5) உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குழந்தை திங்கட்கிழமை (5) காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (5) பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- Advertisement -