மலையகம் ஊடான ரயில் போக்குவரத்தில் புகையிரதங்கள் தடம் புரள்வது அடிக்கடி இடம்பெறுவதால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரு பெட்டிகளை நீக்க உத்தரவு பிற்பிப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 55 இருக்கைகள் கொண்ட புகையிரத கண்காணிப்புப் பெட்டிகளில் 2 பெட்டிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அகற்றுமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்தார்.
மலையக ரயில் பாதைகளின் வளைவுகளின் கூர்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக ரயில் பாதைகளில் 80% ரயில்கள் தடம் புரண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டிய அவர், மலையக ரயில் பாதைகளில் இயக்குவதற்கு 45 இருக்கைகள் கொண்ட ரயில் கண்காணிப்பு பெட்டிகளை ஒதுக்க பரிந்துரைத்துள்ளார்.