Tuesday, April 1, 2025

விபத்தில் சிக்கி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு!

- Advertisement -
- Advertisement -

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு –

ராகம வைத்தியசாலை பணிப்பாளர் PSO காட்ன்டபிள் ஜெயத்திலக்வும் பலியானதாக பொலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி இராஜங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதியுள்ளது. பின்னர், பாதுகாப்பு வேலியில் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக வீதியின் R 11.1 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஜயகொடி என்ற பாதுகாப்பு அதிகாரியே இதன்போது உயிரிழந்தவராவார்.

அவருடைய இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular