- Advertisement -
- Advertisement -
ஜனாதிபதி அணில் வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணம் வந்தடைந்தார். இந்த நிலையில் இன்று வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்து தொடர்பிலான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
அதனையடுத்து மாநகர சபையினை சூழவுள்ள இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாநகரசபை கலாசார மண்டபத்தினை அண்மித்துள்ள நூலக வீதி, நகரசபை வீதி என்பன முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -