- Advertisement -
- Advertisement -
ஜோர்தானில் ஏறக்குறைய 350 இலங்கையர்கள் உணவு மற்றும் பிற பொருட்கள் இன்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோர்தானின் சஹாப் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிய சென்ற இலங்கையர்கள் சுமார் ஒன்றரை வருடங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இவ்வாறு கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தும் விசாரணை நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதன்படி உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் அவர்கள்கோரிக்கை விடுக்கின்றனர்
- Advertisement -