- Advertisement -
- Advertisement -
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.
இதன்படி நவம்பர் 5ஆம் திகதி 2356/43 இலக்க வர்த்தமானி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரங்கள், பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு கலைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -