Tuesday, April 1, 2025

கம்பளையில் அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் அதிர்ச்சி!

- Advertisement -
- Advertisement -

கம்பளையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட நபர் ஒருவர் 07 நாட்களின் பின் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலத்தை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வராததால் சடலம் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில்,  இறந்தவரின்  உறவினர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதன்படி உயிரிழந்தவரின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்ட தாயும் சகோதரரும் கம்பளை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.

சகோதரர் மற்றும் உறவினர்கள் சடலத்தை அடையாளம் கண்டதையடுத்து கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சடலத்தை விடுவித்ததுடன்  குழுவினர் சடலத்தை மேரிவிலவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு 2 நாட்களுக்கு பின்னர் அடக்கம் செய்தனர்.

சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டவர் வீட்டிற்கு வந்துள்ளார். ‘அம்மா  நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தாயார், ‘நீங்கள் கம்பளையில் இறந்துவிட்டீர்கள் என்றும், நாங்கள் உங்களை வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த குறித்த நபர், ‘இல்லை.. அம்மா நான் கம்பளைக்கு போகவில்லை. ‘நான் நாவலப்பிட்டியில் இருந்தேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தாயும்  சகோதரனும், உறவினர்களும் இறந்து விட்டதாக நினைத்து புதைத்தவர் தொடர்பில் ஆராய்வதற்காக மரண விசாரணை அதிகாரியை சந்தித்தனர்.

சுமார் எழுபதாயிரம் ரூபா இறுதிச்சடங்கிற்கு செலவானதாக இக்குழுவினர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சம்பவத்தை விபரித்துள்ளனர்.
அதற்கமைய மரண விசாரணை அதிகாரியின் அறிவித்தலின் பேரில் புதைக்கப்பட்ட நபர் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்ததாக கருதப்படும் நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும்  அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும்  அதன் பின்னர் திருமணமான தனது மகள்களின் வீடுகளில் தங்கி அந்த வீடுகளுக்கு வெளியில் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் சமீபகாலமாக நாவலப்பிட்டி பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த அவர்  நாவலப்பிட்டி நகரிலேயே அதிக நேரத்தைக் கழித்ததால்  நீண்ட நாட்களாக மகளின் வீட்டுக்குச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular