Thursday, March 27, 2025

வவுனியாவில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசு கார்!

- Advertisement -
- Advertisement -

வவுனியா – ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து இன்று (30.10) விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் நோக்கி ஏ9 வீதியால் சென்ற சொகுசு காரானது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாந்தசோலை சந்தியில் அமைந்துள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவரும், சாரதியும் பயணித்த நிலையல், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் பாலத்திற்குள் விழுந்த காரை பாரம் தூக்கியின் துணையுடன் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular