Monday, March 17, 2025

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் உயிரிழப்பு

- Advertisement -
- Advertisement -

வவுனியா – மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது வவுனியா – மன்னார் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (10.10.2023) இடம்பெற்றுள்ளது.வவுனியா, குருக்கள்புதுக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிளானது, பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வி.ஜெயந்தினி (வயது 45) என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மகன் விஜயரட்னம் சிவரோஜன் (வயது 22) காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular