Tuesday, March 18, 2025

வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு சந்தேகநபர்களை 11திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பு

- Advertisement -
- Advertisement -

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில்
சந்தேகநபர்களை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும், மீண்டும் 11 திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ம் 3ம் 4ம் 5ம் சாட்சிகள் நீதிமன்றில் முன்னிலைபடுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

இதன்போது, மன்றில் 4ம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்கமுற்பட்ட போது நீதிபதி இன்று (02.08) உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களை அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும் அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கோடாளி, கத்தி, இரும்புகம்பி என்பன நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் இன்று (02.08) வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்படுதிய பின்னர வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் இன்று (02. 08) மாலை ஆஜர்படுத்தினர்.

இதன்போதே சந்தேக நபர்களை எதிர்வரும் 11 வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.nஅத்துடன், சந்தேகநபர்கள் சிறு நோய்களுக்கு உட்பட்டவர்கள் என்பதனால் சிறைச்சலை வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற்றுக் கொடுக்க பணித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சங்கர்ரூவான், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சந்தேக நபர்களை அனுப்பி வைத்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular