- Advertisement -
- Advertisement -
பெங்களூரை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் இவர். இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாகத்தான் இவர் அதிகம் ரீச் ஆனார்.சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட யாஷிகாவுக்கு சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.திடீரென ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்றார். தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாவும் யாஷிகா மாறிவிட்டார்.
- Advertisement -